தேர்தல் பத்திரத் திட்டத்தை 2024 பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததற்குப் பிறகு, அரசியல் கட்சிகளின் நிதி வருவாய் விவரங்கள் அதிக கவனம் பெற்றுள்ளன. இந்தச் சூழலில், 2024–25 நிதியாண்டில் பாஜக பெற்ற நன்கொடை விவரங்கள் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. பாஜகவின் மொத்த நன்கொடை எவ்வளவு? 2024–25 நிதியாண்டில் பாஜக சுமார் ரூ.6,000 கோடி நன்கொடை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதில் ரூ.3,689 கோடி தேர்தல் அறக்கட்டளைகள் (Electoral Trusts) மூலம் கிடைத்துள்ளது இது மொத்த நன்கொடையின் சுமார் 62 சதவிகிதம் இந்திய சட்டப்படி, தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் நிறுவனங்களும் தனிநபர்களும் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்கலாம். ரூ.20,000-க்கும் அதிகமான நன்கொடைகள் தேர்தல் ஆணையத்தில் அறிவிக்கப்பட வேண்டும். மற்ற கட்சிகளின் நிலை காங்கிரஸ்: ரூ.517 முதல் 522 கோடி வரை நன்கொடை (விவரங்கள் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை) திரிணாமூல் காங்கிரஸ்: ரூ.184.5 கோடி (இதில் ரூ.153.5 கோடி தேர்தல் அறக்கட்டளைகள் மூலம்) இந்தப் பின்னணியில், பாஜகவுக்கு அதிகமாக நன்கொடை அளித்த தனிநபர்கள் யார் என்பது கவனத்தை ஈர்த்துள்ளது. பாஜகவுக்கு அதிக நன்கொடை வழங்கிய 5 முக்கிய தொழிலதிபர்கள் 1. சுரேஷ் அம்ருத்லால் கோடக் – ரூ.30 கோடி 2024–25 நிதியாண்டில் பாஜகவுக்கு அதிகபட்ச நன்கொடை அளித்த தனிநபர் இவர். பாஜக: ரூ.30 கோடி காங்கிரஸ்: ரூ.7.5 கோடி இந்திய பருத்தித் துறையில் முக்கிய தொழிலதிபர் “இந்தியாவின் பருத்தி மனிதர்” என்ற பெயரால் அறியப்படுகிறார் இந்திய பருத்தி சங்கத்தின் முன்னாள் தலைவர் 2. அல்லா தாக்ஷாயனி – ரூ.25 கோடி ராம்கி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் அறங்காவலர் ராம்கி குழு: உள்கட்டமைப்பு, கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் திட்டங்களில் செயல்படும் நிறுவனம் ஆண்டு வருமானம்: ரூ.4,500 கோடிக்கு மேல் இவரது கணவர் அல்லா அயோத்யா ராமி ரெட்டி – ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ADR அறிக்கைப்படி, இந்தியாவின் மிகப்பணக்கார எம்.பிக்களில் ஒருவர் டெல்லியில் அரசியல் ஒத்துழைப்பு இருந்தாலும், ஆந்திராவில் பாஜக – ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 3. தினேஷ் சந்திர அகர்வால் – ரூ.21 கோடி டிஆர்ஏ இன்ஃப்ராகான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் உள்கட்டமைப்பு துறையில் செயல்படும் நிறுவனம் அதே நிதியாண்டில், அவரது நிறுவனம் மட்டும் பாஜகவுக்கு ரூ.61.78 கோடி நன்கொடை அளித்துள்ளது ரூ.5,700 கோடி மதிப்பிலான குவாஹாட்டி ரிங் ரோடு திட்ட ஒப்பந்தம் இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது 4. ஹர்திக் அகர்வால் – ரூ.20 கோடி தினேஷ் சந்திர அகர்வாலின் மகன் டிஆர்ஏ இன்ஃப்ராகான் நிறுவன இயக்குநர் தந்தை–மகன் இருவரின் நன்கொடை சேர்த்து, பாஜகவுக்கு குறிப்பிடத்தக்க நிதி ஆதரவு கிடைத்துள்ளது 5. ரமேஷ் குன்ஹிகன்னன் – ரூ.17 கோடி மைசூரை தலைமையிடமாகக் கொண்ட கென்ஸ் டெக்னாலஜி நிறுவன நிறுவனர் பாதுகாப்பு மற்றும் செமிகண்டக்டர் துறையில் முக்கிய நிறுவனம் குஜராத் சனந்தில் ரூ.3,300 கோடி முதலீட்டில் செமிகண்டக்டர் உற்பத்தி அலகு மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் செயல்படும் திட்டம் பாஜக தலைவர்கள் அளித்த நன்கொடை 2024–25 நிதியாண்டில் பாஜக தலைவர்களும் எம்.பிக்களும் தனிப்பட்ட முறையில் நன்கொடை அளித்துள்ளனர். திரிவேந்திர சிங் ராவத் – ரூ.11.51 லட்சம் பைஜெயந்த் ஜெய் பாண்டா – ரூ.6 லட்சம் ஜுவால் ஒராம் – ரூ.5 லட்சம் ஹிமந்த பிஸ்வா சர்மா – ரூ.3 லட்சம் (பல தவணைகளாக) ஒடிஷா, அசாம் மாநில எம்.எல்.ஏக்கள் – கோடிக்கணக்கான ரூபாய் மொத்தமாக அரசியல் ரீதியான முக்கியத்துவம் தேர்தல் பத்திரத் திட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு, நன்கொடையாளர்களின் பெயர்கள் வெளிப்படையாக அறியப்படுவது அரசியல் நிதியில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், செமிகண்டக்டர் போன்ற துறைகளில் செயல்படும் பெரிய நிறுவனங்களின் நன்கொடைகள் அரசியல்–வணிக உறவுகள் குறித்த விவாதத்தையும் மீண்டும் முன்வைத்துள்ளன. இனி வரும் தேர்தல் காலத்தில், அரசியல் கட்சிகளின் நிதி ஆதாரங்கள் பொதுமக்கள் கவனத்தில் முக்கிய இடம் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை திமுக முற்றிலும் புறக்கணிப்பதாக, திமுக செய்தித்தொடர்பு குழுத் தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். “முதல்வரே விசில் சின்னத்திற்கு வாக்களிப்பார்” என விஜய் கூறியது நகைச்சுவை எனவும், விஜய் அரசியலில் சிறந்த காமெடியனாகவே செயல்பட்டு வருகிறார் எனவும் அவர் விமர்சித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் நடைபெற்றது. இதில் பேசிய விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்ததுடன், தமிழகத்தின் அனைத்து வீடுகளிலும் தவெக இருப்பதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் எழுப்பிக் கேட்டாலும் விசில் சின்னத்திற்கு வாக்களிப்பார் எனவும் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்து பேசிய டி.கே.எஸ் இளங்கோவன், “விஜய்க்கு எதிராக கருத்து சொல்ல வேண்டிய அவசியமே இல்லை; அவரை புறக்கணிக்கிறோம். காலை 12 மணிக்கு வருவதாக கூறிவிட்டு மாலை 7 மணிக்கு வந்ததால், தண்ணீர் மற்றும் உணவு இல்லாமல் சிலர் மயங்கி உயிரிழந்ததாக தகவல் உள்ளது. அதற்கும் திமுகமே காரணம் என பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறார்” என்று குற்றம்சாட்டினார். மேலும், “எப்படியாவது முதலமைச்சராக வேண்டும் என்ற கனவில் விஜய் இருக்கிறார். முதலமைச்சரை விமர்சித்தால் தான் மக்கள் தன்னை முதல்வராக்குவார்கள் என்ற தவறான எண்ணத்தில் பேசுகிறார்” என தெரிவித்தார். எம்ஜிஆர்-வுடன் விஜயை ஒப்பிடுவது குறித்து கடுமையாக விமர்சித்த இளங்கோவன், “எம்ஜிஆர் மக்களுக்காக வாழ்ந்தவர்; அவரது திரைப்படங்களிலும் கொள்கைகள் தெளிவாக இருந்தன. விஜய் இதுவரை தனது கொள்கை என்ன என்பதே சொல்லவில்லை. திமுகவை விமர்சிப்பதே அவரது அரசியல்” என்றார். “எம்ஜிஆர்-ரோடு விஜயை ஒப்பிடுவது அதீத கற்பனை; பைத்தியக்காரத்தனம் என்பதை மக்கள் நன்றாகவே அறிவார்கள்” என்றும் அவர் கூறினார். மேலும், “முதல் தேர்தலிலேயே போட்டியிடாமல் மக்களுக்காக போராடி சிறை சென்றவர்கள் திமுக தலைவர்கள். ஆனால், வந்த உடனே முதலமைச்சராக வேண்டும் என கற்பனையில் விஜய் வாழ்கிறார். ஒரு போராட்டம் நடத்தி சிறைவாசம் சென்றால் கட்சியே வேண்டாம் என ஓடிவிடுவார்” என்றும் விமர்சித்தார். தொடர்ந்து, “முதல்வரே விசில் சின்னத்திற்கு வாக்களிப்பார் என்பது வெறும் நகைச்சுவை. விஜய் ஒரு சிறந்த காமெடியனாகவே தற்போது செயல்பட்டு வருகிறார். கதாநாயகன் வாய்ப்பு போனால் நகைச்சுவை நடிகர் வாய்ப்பு கிடைக்குமா என முயற்சி செய்கிறாரோ தெரியவில்லை” என கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும், “இரண்டாண்டுகளில் விஜய் என்ன அரசியல் செயல்பாடு செய்துள்ளார்? அவரது கட்சியின் கொள்கைகளை பட்டியலிடச் சொல்லுங்கள். பாஜக கூட பல கணக்கீடுகள் செய்து தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணியில் சேர்க்காமல் புறக்கணித்துள்ளது” என டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான கௌதம் வாசுதேவ் மேனன், திரைப்படத் துறையில் தனது பயணம் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், உணர்வுப்பூர்வமான நன்றிக் குறிப்பை வெளியிட்டுள்ளார். மாதவன் நடிப்பில் வெளியான ‘மின்னலே’ திரைப்படம், கௌதம் மேனனின் முதல் இயக்கமாகும். இந்த படம் 2001 பிப்ரவரி 1ஆம் தேதி வெளியானது. அதன் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்த வைத்த கௌதம் மேனன், இன்று 25 ஆண்டுகளைக் கடந்த இயக்குநராக திகழ்கிறார். இந்த மைல்கல்லை நினைவுகூர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சினிமா என்பது வெறும் காட்சிகளை பதிவு செய்வது அல்ல; காலத்தையே படம் பிடிப்பது. நான் முதன்முதலாக ‘ஆக்ஷன்’ என்று கத்தியது 25 ஆண்டுகளுக்கு முன்பு. இந்த காலப் பயணம் என்னை உணர்ச்சிமயமாக்குகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “இந்த 25 ஆண்டுகள் என்னுடைய தனிப்பட்ட சாதனை அல்ல. என்னுடன் பயணித்த எண்ணற்ற மனிதர்களின் கனவுகள், உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் கூட்டு பயணம் தான் இது” என்றும் தெரிவித்துள்ளார். தனது படங்களில் நடித்த நடிகர்கள் குறித்து பேசும் அவர், “என் கற்பனையில் பிறந்த கதாபாத்திரங்களுக்கு உயிர், குரல், இதயத் துடிப்பு கொடுத்த நடிகர்களுக்கு என் ஆழ்ந்த நன்றி. என் எழுத்துகளுக்கு நீங்கள் உயிரூட்டினீர்கள்” என குறிப்பிட்டுள்ளார். அதேபோல், தனது தொழில்நுட்ப குழுவினருக்கும், “25 ஆண்டுகளாக லென்ஸின் பின்னால் நின்று என் கற்பனையை வடிவமைத்த அனைவருக்கும் என் மரியாதையும் நன்றியும். சினிமா மீது நாங்கள் பகிர்ந்த அன்பு அளவிட முடியாதது” என அவர் தெரிவித்தார். தன்னை வழிநடத்திய மூத்த இயக்குநர்கள், வழிகாட்டிகள் மற்றும் சமகால இயக்குநர்கள் பற்றியும் நன்றியுடன் நினைவு கூர்ந்த கௌதம் மேனன், “உங்கள் படைப்புகள் எனக்கு தொடர்ந்து ஊக்கமும் சவாலும் அளித்து வருகின்றன” என கூறியுள்ளார். இறுதியாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், “என் கதைகளை உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிய பார்வையாளர்களே என் மிகப்பெரிய வெகுமதி. சினிமா மீது என் காதல் தொடர்கிறது. அடுத்த காட்சி காத்திருக்கிறது” என்று பதிவை நிறைவு செய்துள்ளார்.
வருங்கால வைப்பு நிதி (Provident Fund – PF) என்பது சம்பளம் பெறும் ஊழியர்களின் முக்கியமான நீண்டகால சேமிப்பாகும். ஆனால், இந்த PF தொகையை எப்போது எடுக்கலாம், எவ்வளவு எடுக்கலாம் என்பதில் பலருக்கும் நீண்ட காலமாக குழப்பம் இருந்து வந்தது. விதிகள் அதிகமாகவும், சேவை கால நிபந்தனைகள் சிக்கலாகவும் இருந்ததால், அவசர நேரங்களிலும் தங்களுக்கே உரிய பணத்தை எடுக்க முடியாமல் பல ஊழியர்கள் சிரமப்பட்டனர். இந்த நிலையை மாற்றும் வகையில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், PF பணம் எடுக்கும் நடைமுறை இப்போது மிகவும் தெளிவாகவும் எளிதாகவும் மாற்றப்பட்டுள்ளது. 13 பிரிவுகளுக்கு பதிலாக 5 முக்கிய பிரிவுகள் முன்னதாக, PF பணம் எடுப்பதற்கு சுமார் 13 விதமான காரணப் பிரிவுகள் இருந்தன. ஒவ்வொரு பிரிவுக்கும் 2 முதல் 7 ஆண்டுகள் வரை மாறுபடும் சேவை கால நிபந்தனைகள் இருந்ததால், பொதுமக்கள் அவற்றை புரிந்துகொள்வதே கடினமாக இருந்தது. புதிய திருத்தங்களின் படி, EPFO இந்த 13 பிரிவுகளை 5 முக்கிய பிரிவுகளாக குறைத்துள்ளது. இதனால் விதிகள் எளிமையாகி, எந்த சூழ்நிலையில் எவ்வளவு தொகையை எடுக்கலாம் என்பது தெளிவாக விளங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. ஒரு ஆண்டு சேவை போதுமானது இந்த மாற்றங்களில் முக்கியமான ஒன்று, குறைந்தபட்ச சேவை காலம் தொடர்பான எளிமைப்படுத்தலாகும். தற்போது, பெரும்பாலான பகுதி அளவு PF பணம் எடுப்பதற்கு, உறுப்பினர் குறைந்தபட்சம் 12 மாதங்கள் (ஒரு ஆண்டு) சேவை செய்திருந்தாலே போதும். முன்பு, பணம் எடுக்கும் காரணத்தைப் பொறுத்து சேவை காலம் மாறுபட்டதால் ஏற்பட்ட குழப்பம், இந்த புதிய விதியால் பெரும்பாலும் நீக்கப்பட்டுள்ளது. அதிக தொகை எடுத்துக்கொள்ளும் வசதி முன்னதாக, PF-இல் இருந்து பகுதி அளவாக எடுக்கும்போது, ஊழியரின் சொந்த பங்களிப்பிற்கே பெரும்பாலும் அனுமதி வழங்கப்பட்டது. அதுவும் 50% அல்லது 100% என்ற வரம்புடன் இருந்தது. புதிய விதிகளின் கீழ், ஊழியர் மற்றும் நிறுவனத்தின் பங்களிப்புகள், அதற்கான வட்டியுடன் சேர்த்து எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில், உறுப்பினர்கள் தங்களின் மொத்த PF இருப்பில் இருந்து 75% வரை எடுத்துக்கொள்ள முடியும். 100% PF தொகையை எப்போது எடுக்கலாம்? ஒரு ஆண்டு சேவைக்குப் பிறகு, கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் முழு PF தொகையையும் (100%) எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது: உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கான மருத்துவச் செலவுகள் குழந்தைகளின் கல்விச் செலவுகள் திருமணச் செலவுகள் வீடு வாங்குதல் அல்லது வீடு கட்டுதல் வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துதல் பெரிய அளவிலான வீட்டுப் பழுதுபார்ப்பு பணிகள் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், காரணம் குறிப்பிடாமல் கூட பணம் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. இருப்பினும், ஒரு நிதியாண்டில் இந்த வசதியை எத்தனை முறை பயன்படுத்தலாம் என்பதற்கு வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன. ஓய்வூதிய சேமிப்பை பாதுகாக்கும் கட்டுப்பாடுகள் PF விதிகள் நெகிழ்வாக மாற்றப்பட்டிருந்தாலும், நீண்டகால ஓய்வூதிய சேமிப்பை பாதுகாக்க EPFO சில கட்டுப்பாடுகளை தொடர்ந்து வைத்துள்ளது. அடிக்கடி பணம் எடுப்பதைத் தடுக்கும் வகையில், PF இருப்பில் குறைந்தபட்சமாக ஒரு பகுதி (சுமார் 25%) பாதுகாக்கப்படும் விதத்தில் விதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அடிக்கடி PF பணம் எடுப்பதால், குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் ஊழியர்கள், கூட்டு வட்டியின் நீண்டகால பலன்களை இழக்கக்கூடும் என்பதையும் EPFO கவனத்தில் கொண்டுள்ளது. வேலை இழந்தவர்களுக்கு சிறப்பு நிவாரணம் வேலை இழந்த உறுப்பினர்களுக்கும் இந்த புதிய விதிகள் முக்கிய நிவாரணமாக அமைகின்றன. வேலை இழந்த உடனேயே, PF இருப்பில் இருந்து 75% வரை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டு வரை புதிய வேலை கிடைக்காவிட்டால், மீதமுள்ள தொகையையும் முழுமையாக எடுத்துக்கொள்ளலாம். இது வேலை இழப்பு காலத்தில் ஏற்படும் நிதிச் சிரமங்களை ஓரளவு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில சூழ்நிலைகளில் முழு PF தொகை மேலும், கீழ்க்கண்ட நிலைகளில் 100% PF தொகையை திரும்பப் பெற அனுமதி உண்டு: 55 வயதில் ஓய்வு பெறுதல் நிரந்தர உடல் ஊனம் பணிநீக்கம் விருப்ப ஓய்வு (VRS) வெளிநாட்டில் நிரந்தரமாக குடியேறுதல் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) மாற்றமில்லை இந்த புதிய மாற்றங்கள் PF பணம் எடுப்பதற்கான விதிகளில் மட்டுமே பொருந்தும். ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (EPS) தொடர்பான விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன் பணியிலிருந்து விலகும் உறுப்பினர்கள் EPS தொகையை ஒரே முறையாக பெறலாம். மாதாந்திர ஓய்வூதியம் பெற, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவை என்பது இன்னமும் கட்டாயமாகும். முடிவாக EPFO கொண்டு வந்துள்ள இந்த எளிமைப்படுத்தப்பட்ட விதிகள், PF பணம் எடுக்கும் செயல்முறையை வேகமாகவும், வெளிப்படையாகவும் மாற்றும் வகையில் அமைந்துள்ளன. குறுகிய கால அவசர தேவைகளுக்கும், நீண்டகால ஓய்வூதியப் பாதுகாப்புக்கும் இடையில் சமநிலையை உருவாக்குவதே இந்த மாற்றங்களின் முக்கிய நோக்கமாகும். இது PF உறுப்பினர்களுக்கு நடைமுறையில் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பேசிய பேச்சு, சாதாரண அரசியல் விமர்சனமாக இல்லாமல், ஒரு தெளிவான அரசியல் வியூகத்தின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது. அவரது முழுப் பேச்சின் மையம் ஒரே கோட்டில் நகர்ந்தது— “எம்ஜிஆர் போல நானும்… திமுக எனது எதிரி” என்பதுதான். எம்ஜிஆர் குறிப்பு – ஏன் முக்கியம்? விஜய், எம்ஜிஆரை மீண்டும் மீண்டும் முன்வைப்பதன் மூலம் மூன்று விஷயங்களை ஒரே நேரத்தில் சொல்ல முயல்கிறார்: நடிகர் → அரசியல் தலைவர் என்ற ஒப்பீடு எம்ஜிஆரை நடிகர் என்பதற்காக எப்படி விமர்சித்தார்களோ, அதேபோல தன்னையும் விமர்சிக்கிறார்கள் என்று கூறி, அந்த விமர்சனங்களை மக்கள் நிராகரிப்பார்கள் என்ற நம்பிக்கையை உருவாக்க முயல்கிறார். திமுக = எதிரி என்ற நேரடி கோடு திமுகவை ‘தீய சக்தி’ என வர்ணித்து, தன்னை ‘தூய சக்தி’ என நிலைநிறுத்துவதன் மூலம், அரசியல் போட்டியை தவெக vs திமுக என்ற இரட்டைச் சண்டையாக மாற்ற முயற்சிக்கிறார். அதிமுக இடத்தை நிரப்பும் முயற்சி திமுக எதிர்ப்பு வாக்குகளை ஒரே திசையில் திருப்ப, பாரம்பரியமாக அதிமுக வைத்திருந்த “எம்ஜிஆர் மரபு” அரசியலை தன் பக்கம் இழுக்கும் முயற்சியும் இதில் உள்ளது. ‘மும்முனைப் போட்டி இல்லை’ என்ற விஜயின் வாதம் “எத்தனை முனைப் போட்டி வந்தாலும், திமுகவை வீழ்த்த முடியும் சக்தி நாங்கள்தான்” என்ற விஜயின் கூற்று, அதிமுகவை அரசியல் களத்தில் இரண்டாம் நிலைக்கு தள்ளும் முயற்சியாகவும், தன்னை முதன்மை மாற்று சக்தி என நிறுவும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. இதற்குத்தான் அதிமுக தரப்பில் இருந்து “தவறான கணக்கு” என்ற விமர்சனம் எழுகிறது. அரசியல் விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள்? அரசியல் ஆய்வாளர்கள் கூறுவது என்னவெனில்: எம்ஜிஆர் கால அரசியல் சூழல் வேறு, இன்றைய அரசியல் கட்டமைப்பு வேறு. எம்ஜிஆரிடம் இருந்த கட்சிக்குள் இருந்த ஆதரவு, ரசிகர் மன்றங்களின் கட்டமைப்பு, கால சூழல் ஆகியவை இன்றைய புதிய கட்சிகளுக்கு இல்லை. அதனால், எம்ஜிஆரை நேரடியாக ‘மாதிரி’ ஆக்குவது தேர்தலில் உடனடி வெற்றியை தருமா என்பது கேள்விக்குறி. திமுக பார்வை திமுக இந்தப் பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், “இது திமுகவுக்கு எதிரான தாக்குதலாக காட்டப்படுகிறதாலும், உண்மையில் இது அதிமுகவுக்கு வைக்கப்படும் செக்” என்ற கோணத்தில் பார்க்கிறது. மேலும், “மக்கள் பிரச்னைகளில் போராடாமல், நேரடியாக ஆட்சியை அடைய நினைப்பது அரசியல் யதார்த்தமல்ல” என்றும் விமர்சிக்கிறது. முடிவாக… விஜயின் இந்தப் பேச்சு, எம்ஜிஆர் சின்னத்தை அரசியல் ஆயுதமாக மாற்றும் முயற்சி, திமுக எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்கிற வியூகம், அதிமுகவின் பாரம்பரிய இடத்தை சவால் செய்யும் அரசியல் நகர்வு என்ற மூன்று அடுக்குகளில் நகர்கிறது. ஆனால், இந்த வியூகம் தேர்தல் களத்தில் வாக்குகளாக மாறுமா? அல்லது பேச்சு மட்டுமே பரபரப்பாக முடிவடையுமா? அதற்கான பதில் வரவிருக்கும் அரசியல் களத்தில்தான் தெரியவரும்.
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை திமுக முற்றிலும் புறக்கணிப்பதாக, திமுக செய்தித்தொடர்பு குழுத் தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். “முதல்வரே விசில் சின்னத்திற்கு வாக்களிப்பார்” என விஜய் கூறியது நகைச்சுவை எனவும், விஜய் அரசியலில் சிறந்த காமெடியனாகவே செயல்பட்டு வருகிறார் எனவும் அவர் விமர்சித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் நடைபெற்றது. இதில் பேசிய விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்ததுடன், தமிழகத்தின் அனைத்து வீடுகளிலும் தவெக இருப்பதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் எழுப்பிக் கேட்டாலும் விசில் சின்னத்திற்கு வாக்களிப்பார் எனவும் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்து பேசிய டி.கே.எஸ் இளங்கோவன், “விஜய்க்கு எதிராக கருத்து சொல்ல வேண்டிய அவசியமே இல்லை; அவரை புறக்கணிக்கிறோம். காலை 12 மணிக்கு வருவதாக கூறிவிட்டு மாலை 7 மணிக்கு வந்ததால், தண்ணீர் மற்றும் உணவு இல்லாமல் சிலர் மயங்கி உயிரிழந்ததாக தகவல் உள்ளது. அதற்கும் திமுகமே காரணம் என பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறார்” என்று குற்றம்சாட்டினார். மேலும், “எப்படியாவது முதலமைச்சராக வேண்டும் என்ற கனவில் விஜய் இருக்கிறார். முதலமைச்சரை விமர்சித்தால் தான் மக்கள் தன்னை முதல்வராக்குவார்கள் என்ற தவறான எண்ணத்தில் பேசுகிறார்” என தெரிவித்தார். எம்ஜிஆர்-வுடன் விஜயை ஒப்பிடுவது குறித்து கடுமையாக விமர்சித்த இளங்கோவன், “எம்ஜிஆர் மக்களுக்காக வாழ்ந்தவர்; அவரது திரைப்படங்களிலும் கொள்கைகள் தெளிவாக இருந்தன. விஜய் இதுவரை தனது கொள்கை என்ன என்பதே சொல்லவில்லை. திமுகவை விமர்சிப்பதே அவரது அரசியல்” என்றார். “எம்ஜிஆர்-ரோடு விஜயை ஒப்பிடுவது அதீத கற்பனை; பைத்தியக்காரத்தனம் என்பதை மக்கள் நன்றாகவே அறிவார்கள்” என்றும் அவர் கூறினார். மேலும், “முதல் தேர்தலிலேயே போட்டியிடாமல் மக்களுக்காக போராடி சிறை சென்றவர்கள் திமுக தலைவர்கள். ஆனால், வந்த உடனே முதலமைச்சராக வேண்டும் என கற்பனையில் விஜய் வாழ்கிறார். ஒரு போராட்டம் நடத்தி சிறைவாசம் சென்றால் கட்சியே வேண்டாம் என ஓடிவிடுவார்” என்றும் விமர்சித்தார். தொடர்ந்து, “முதல்வரே விசில் சின்னத்திற்கு வாக்களிப்பார் என்பது வெறும் நகைச்சுவை. விஜய் ஒரு சிறந்த காமெடியனாகவே தற்போது செயல்பட்டு வருகிறார். கதாநாயகன் வாய்ப்பு போனால் நகைச்சுவை நடிகர் வாய்ப்பு கிடைக்குமா என முயற்சி செய்கிறாரோ தெரியவில்லை” என கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும், “இரண்டாண்டுகளில் விஜய் என்ன அரசியல் செயல்பாடு செய்துள்ளார்? அவரது கட்சியின் கொள்கைகளை பட்டியலிடச் சொல்லுங்கள். பாஜக கூட பல கணக்கீடுகள் செய்து தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணியில் சேர்க்காமல் புறக்கணித்துள்ளது” என டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் பதிலளிக்க 3 வாரம் அவகாசம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) மாம்பழம் சின்னம் மற்றும் கட்சி உரிமை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், இந்தியத் தேர்தல் ஆணையம் மூன்று வாரங்களுக்குள் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாமகவில் நீடித்து வரும் உள்கட்சி மோதல், தற்போது சட்டப்போராட்டமாக மாறியுள்ளது. கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கிடையிலான கருத்து வேறுபாடு, கடந்த சில மாதங்களாகவே வெளிப்படையாக அரசியல் அரங்கில் பேசுபொருளாக இருந்து வருகிறது. உள்கட்சி பிளவு தீவிரம் நிர்வாகிகள் நியமனம், கட்சி பொறுப்புகள், ஆலோசனை நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இருதரப்பினரும் தனித்தனியாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால், கட்சிக்குள் மோதல் அதிகரித்து, ஒருவருக்கொருவர் எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்த உள்கட்சி விவகாரம் நீதிமன்றத்துக்கே சென்றுள்ளது. ராமதாஸ் மனுவில் குற்றச்சாட்டு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவில், கட்சித் தலைவர் பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும், அன்புமணி ராமதாஸ் போலி ஆவணங்களை பயன்படுத்தி கட்சி உரிமை கோருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மாம்பழம் சின்னம் தொடர்பாக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்குவதாக தெரிவித்த நிலையில், பின்னர் அன்புமணி ராமதாஸ் தரப்பின் முகவரிக்கு சின்னம் ஒதுக்கீடு செய்து கடிதம் அனுப்பியதை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். உயர் நீதிமன்றத்தின் உத்தரவு இந்த வழக்கை, தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. ராமதாஸ் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து, மூன்று வாரங்களுக்குள் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதே நேரத்தில், இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பினராக சேர்க்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தரப்பு முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு மாம்பழம் சின்னம் மற்றும் கட்சி உரிமை தொடர்பான இந்த வழக்கின் தீர்ப்பு, பாமக எதிர்கால அரசியல் நிலைப்பாட்டில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அரசியல் வட்டாரங்களில் இந்த வழக்கு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ் மன்னர்களை விமர்சித்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட கருத்து அரசியல் மற்றும் அறிவுசார் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான மன்னர் மன்னன் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராஜராஜ சோழன் ஆட்சியில் தான் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டதாகவும், வரலாற்றை முழுமையாக அறியாமல் திருமாவளவன் பேசுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். சேர, சோழ, பாண்டியர்கள் உள்ளிட்ட மூவேந்தர்களை குறிப்பிட்டு, அவர்கள் தமிழ்க் கலாச்சாரத்தை அழித்தவர்கள் என்றும், அவர்களது ஆட்சிக் காலத்தில்தான் தமிழ்நாடு வீழ்ச்சியடைந்ததாகவும் திருமாவளவன் பேசியது பெரும் சர்ச்சையாக மாறியது. இதற்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், திருமாவளவனின் கருத்துக்கு பதிலளித்துள்ள மன்னர் மன்னன், ராஜராஜ சோழனின் இயற்பெயர் “அருள்மொழி” என்றும், அது தூய தமிழ்ப் பெயர் என்றும் விளக்கினார். ராஜராஜ சோழனுக்கு 25-க்கும் மேற்பட்ட பெயர்கள் இருந்ததாகவும், மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட பெயரே ராஜராஜன் என நிலைபெற்றதாகவும் அவர் கூறினார். மேலும், ராஜராஜ சோழன் ஒரே தமிழ்ப் பகுதியை மட்டுமல்லாமல், பல மொழிகள் பேசப்படும் பரந்த நிலப்பரப்புகளை ஆட்சி செய்ததாகவும், அதனாலேயே அவர் பல பெயர்களால் அழைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதற்காக அவரை “சங்கி” என்று அழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார். ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் தமிழுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய மன்னர் மன்னன், தஞ்சை பெரிய கோயிலில் தேவாரம் மற்றும் திருவாசகம் பாடுவதற்காக 48 பேர் நியமிக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களுக்குத் தலைமை தாங்கியவர் கூட தமிழ் மொழி பேசுபவராக இருந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும், “திருமாவளவன் தலித் என்ற சொல்லைப் பயன்படுத்தி பேசுகிறார். அந்தச் சொல் சமஸ்கிருத மூலம் கொண்டது. அப்படியெனில் அவரையும் ‘சங்கி’ என்று சொல்லலாமா?” என கேள்வி எழுப்பிய மன்னர் மன்னன், திருமாவளவன் வரலாற்றை முழுமையாக அறியாமல் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார். ராஜராஜ சோழன் குறித்து முன்னாள் முதல்வர் கருணாநிதி எடுத்த நிலைப்பாட்டையும் அவர் நினைவுகூர்ந்தார். ராஜராஜ சோழனின் ஆயிரமாவது ஆண்டை நினைவுகூர்ந்து நெல் வகைக்கு “ராஜராஜன் ஆயிரம்” என பெயரிட்டதோடு, அவருக்காக வெள்ளி நாணயம் வெளியிட வேண்டும் என்றும் கருணாநிதி வலியுறுத்தியிருந்தார் என கூறினார். மேலும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோருடன் ஒப்பிட்டு திமுக அமைச்சர்கள் பேசியிருப்பதையும் சுட்டிக்காட்டினார். திமுக தலைமை ஒருபுறம் சோழர் ஆட்சியை பெருமைப்படுத்தும் நிலையில், அதே கூட்டணியில் உள்ள திருமாவளவன் முற்றிலும் மாறுபட்ட கருத்தை முன்வைப்பது குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், அவருக்கு வரலாறும் புரியவில்லை, இன்றைய அரசியல் சூழலும் புரியவில்லை என்றும் மன்னர் மன்னன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
எடை குறைப்பு என்ற பெயரில் நடந்த விபரீதம் – மதுரை மாணவியின் மரணம்; ஆயுஷ், மருந்து கட்டுப்பாட்டு துறை கடும் எச்சரிக்கை மதுரையில் இளம் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம், சமூக வலைதளங்களில் பரவும் தவறான உடல்நல ஆலோசனைகளின் ஆபத்தை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. உடல் எடையை குறைக்க முயன்ற நிலையில், வெங்காரம் என்ற பொருளை உட்கொண்டதால் ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக மாணவி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரை செல்லூர் அருகே உள்ள மீனாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்த கலையரசி (19), அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். சிறுவயதிலிருந்தே உடல் பருமன் இருந்ததால், எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோக்களை அவர் தொடர்ந்து பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில், ஒரு வீடியோவில் கூறப்பட்ட ஆலோசனையை நம்பி, அருகிலுள்ள நாட்டு மருந்துக் கடையில் வாங்கிய வெங்காரத்தை கலையரசி உட்கொண்டுள்ளார். இதன் பின்னர், அவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட கடுமையான உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டன. உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு வீடு திரும்பிய நிலையில், அதே இரவு மீண்டும் உடல்நிலை மோசமடைந்தது. பின்னர் ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், அவரை காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக செல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, சம்பவத்திற்கு காரணமான நாட்டு மருந்துக் கடை மற்றும் சமூக வலைதள சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் குறித்து ஆயுஷ் மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் பாரம்பரிய மருத்துவ குறிப்புகள், எடை குறைப்பு டிப்ஸ் போன்றவற்றை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகவரி, பதிவு விவரம் இல்லாத விளம்பரங்களை நம்புவது ஆபத்தானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ் துறை அதிகாரிகள் கூறுகையில், “சமூக வலைதளங்களில் போலி முகவரி, தொடர்பு விவரம் இல்லாத விளம்பரங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் நடவடிக்கை எடுப்பது சவாலாக உள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற தகவல்களை நம்பாமல், அரசு மருத்துவமனைகள் அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்” என தெரிவித்துள்ளனர். எடை குறைப்பு, ஆண்மை குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவும் விளம்பரங்கள், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தவறான புரிதலை உருவாக்கக்கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கலையரசியின் மரணம், இந்த ஆபத்துகளை உணர்த்தும் ஒரு துயரமான எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் புதிய கூட்டாளியை இபிஎஸ் அடையாளம் காட்டுவதால் தமிழக அரசியல் பரபரப்பாகியுள்ளது, டிவிகே கவனம் செலுத்துகிறது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னம் – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ ஒப்புதல் தமிழக அரசியல் களத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), தனது முதல் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அக்கட்சி கோரியிருந்த ‘விசில்’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தற்போது பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இன்னும் அங்கீகாரம் பெறாத கட்சியாகும். இருப்பினும், மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே சின்னத்தில் போட்டியிடும் வகையில், தேர்தல் ஆணையம் பொதுச் சின்னம் வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் கட்சி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட 10 விருப்பச் சின்னங்களில் ‘விசில்’ முதலிடத்தில் இடம்பெற்றிருந்தது. கட்சித் தலைவர் விஜய் விரும்பிய சின்னமே ஒதுக்கப்பட்டுள்ளதால், கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. ஒரு புதிய அரசியல் கட்சிக்கு மாநில அளவில் ஒரே சின்னம் வழங்கப்படுவது, அந்தக் கட்சியின் அடையாளத்தை பொதுமக்களிடம் விரைவாக கொண்டு செல்ல உதவும் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. ‘விசில்’ சின்னம் எச்சரிக்கை, விழிப்புணர்வு மற்றும் மாற்றத்தைக் குறிக்கும் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஊழலுக்கு எதிரான குரல் அல்லது புதிய அரசியல் தொடக்கத்தின் குறியீடாக இதனை த.வெ.க. பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. இதுகுறித்து கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறுகையில், “எங்கள் தலைவர் விரும்பிய விசில் சின்னமே கிடைத்துள்ளது. இது கட்சியின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய ஆரம்ப கட்டமாகும்” எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே, நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும், அவர்கள் பயன்படுத்தி வந்த ‘டார்ச் லைட்’ சின்னம் பொதுச் சின்னமாக மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் பிரச்சாரமும் சின்னங்களும் இப்போதே கவனம் பெறத் தொடங்கியுள்ளன.
ஜீவா நடிப்பில் ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியீடு சென்னை: நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் கதையும் திரைக்கதையும் அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஜீவா, இதற்கு முன்பு ‘ஆசை ஆசையாய்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் காமெடி, காதல், ஆக்ஷன் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த புதிய படத்தில், சமூகப் பின்னணியுடன் கூடிய முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. திரைப்படத்தில் அரசியல் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாக கொண்டு கதை நகர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்கம், இசை மற்றும் நடிகர்களின் நடிப்பு படத்திற்கு முக்கிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. முதல் நாள் வசூல் மற்றும் ரசிகர் கருத்துகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் மாறுதல் காட்டி உள்ளது. கடந்த மாதம் டிசம்பர் 15-ஆம் தேதி தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.1 லட்சத்தைத் தாண்டிய நிலையில், பிறகு சில நேரங்களில் குறைந்தாலும் மீண்டும் அதிகரித்து வருகிறது. அண்மையில் தங்கம் மீண்டும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,000 வரை விற்பனையாகியுள்ளது, இது கடந்த காலத்திலிருந்தும் மேலான நிலையாகும். இதே நேரத்தில் வெள்ளியின் விலை அதிகரித்து வருகிறது; தற்போது ஒரு கிராம் வெள்ளி பாண்டியம் ரூ.340 மற்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.3,40,000 வரையில் விற்பனையாகியுள்ளது. இவ்வாறு தங்கத்தோடும் வெள்ளியோடும் விலைகள் இரண்டுமே உயர்வை காண்கிற காரணமாக, வெள்ளி தற்போது விலையில் தங்கத்தோடு போட்டி செய்யத் தொடங்கியுள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. மொத்தமாக, ஒரே நாளில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டிலும் மாற்றங்கள் நடைபெறுவதால் நகை வாங்குபவர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோர் விலை நிலவரத்தை நெருக்கமாக கண்காணிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான கௌதம் வாசுதேவ் மேனன், திரைப்படத் துறையில் தனது பயணம் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், உணர்வுப்பூர்வமான நன்றிக் குறிப்பை வெளியிட்டுள்ளார். மாதவன் நடிப்பில் வெளியான ‘மின்னலே’ திரைப்படம், கௌதம் மேனனின் முதல் இயக்கமாகும். இந்த படம் 2001 பிப்ரவரி 1ஆம் தேதி வெளியானது. அதன் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்த வைத்த கௌதம் மேனன், இன்று 25 ஆண்டுகளைக் கடந்த இயக்குநராக திகழ்கிறார். இந்த மைல்கல்லை நினைவுகூர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சினிமா என்பது வெறும் காட்சிகளை பதிவு செய்வது அல்ல; காலத்தையே படம் பிடிப்பது. நான் முதன்முதலாக ‘ஆக்ஷன்’ என்று கத்தியது 25 ஆண்டுகளுக்கு முன்பு. இந்த காலப் பயணம் என்னை உணர்ச்சிமயமாக்குகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “இந்த 25 ஆண்டுகள் என்னுடைய தனிப்பட்ட சாதனை அல்ல. என்னுடன் பயணித்த எண்ணற்ற மனிதர்களின் கனவுகள், உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் கூட்டு பயணம் தான் இது” என்றும் தெரிவித்துள்ளார். தனது படங்களில் நடித்த நடிகர்கள் குறித்து பேசும் அவர், “என் கற்பனையில் பிறந்த கதாபாத்திரங்களுக்கு உயிர், குரல், இதயத் துடிப்பு கொடுத்த நடிகர்களுக்கு என் ஆழ்ந்த நன்றி. என் எழுத்துகளுக்கு நீங்கள் உயிரூட்டினீர்கள்” என குறிப்பிட்டுள்ளார். அதேபோல், தனது தொழில்நுட்ப குழுவினருக்கும், “25 ஆண்டுகளாக லென்ஸின் பின்னால் நின்று என் கற்பனையை வடிவமைத்த அனைவருக்கும் என் மரியாதையும் நன்றியும். சினிமா மீது நாங்கள் பகிர்ந்த அன்பு அளவிட முடியாதது” என அவர் தெரிவித்தார். தன்னை வழிநடத்திய மூத்த இயக்குநர்கள், வழிகாட்டிகள் மற்றும் சமகால இயக்குநர்கள் பற்றியும் நன்றியுடன் நினைவு கூர்ந்த கௌதம் மேனன், “உங்கள் படைப்புகள் எனக்கு தொடர்ந்து ஊக்கமும் சவாலும் அளித்து வருகின்றன” என கூறியுள்ளார். இறுதியாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், “என் கதைகளை உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிய பார்வையாளர்களே என் மிகப்பெரிய வெகுமதி. சினிமா மீது என் காதல் தொடர்கிறது. அடுத்த காட்சி காத்திருக்கிறது” என்று பதிவை நிறைவு செய்துள்ளார்.
அச்சு அசல் வடிவேலு போலவே தோற்றம்… வைரலாகும் அவரது மகன் புகைப்படங்கள்! தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்றாலே உடனே நினைவுக்கு வருபவர் நடிகர் வடிவேலு. பல தசாப்தங்களாக ரசிகர்களை சிரிக்க வைத்த அவர், ஒரு காலத்தில் காமெடி சினிமாவின் முகமாகவே திகழ்ந்தார். சமீப காலங்களில் அவரது நகைச்சுவை முன்போல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், ஐந்து ஆண்டுகளுக்கு முன் வரை அவர் தான் இந்த துறையின் முதன்மை நட்சத்திரமாக இருந்தார். நகைச்சுவை நடிகர் நாகேஷ் பெற்றிருந்த புகழுக்கு இணையான மதிப்பு வடிவேலுவுக்கும் இருந்ததாக பலரும் கருதுகின்றனர். உடல் மொழி, முகபாவனை, வசன உச்சரிப்பு என அனைத்திலும் தனித்துவம் காட்டி, ஒரே காட்சியை மீண்டும் மீண்டும் பார்த்தாலும் சிரிப்பை வரவழைக்கும் திறன் அவருக்கே உரியது. காலப்போக்கில் குணச்சித்திர வேடங்களிலும் தன்னை நிரூபித்து, ஒரு முழுமையான நடிகர் என்ற பெயரையும் அவர் பெற்றார். காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் ரசிகர்கள் அவரை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர். தற்போது கூட அவரது பழைய நகைச்சுவை காட்சிகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வருகின்றன. சில ஆண்டுகள் திரையில் தோன்றாதிருந்த போதும், மீம்ஸ் கலாச்சாரம் வழியாக வடிவேலு எப்போதும் டிரெண்டிங்கில் இருந்து வந்தார். அதன் பின்னர் மீண்டும் சில படங்கள் மூலம் திரைத்துறையில் ரீ-என்ட்ரி கொடுத்தார். தனிப்பட்ட வாழ்க்கையில் நடிகர் வடிவேலுவுக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இதில் இரண்டு மகள்களுக்கும், மகனுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டது. இந்நிலையில், அவரது மகன் சுப்பிரமணியின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “அச்சு அசல் வடிவேலு போலவே இருக்கிறார்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். தோற்றம் மட்டுமல்ல, சில முகபாவனைகளிலும் வடிவேலுவின் சாயல் தென்படுவதாக நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
இசையமைப்பாளர் டி. இமான் இன்று (ஜனவரி 24) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மெல்லிசைப் பாடல்களுக்காக தனித்த அடையாளம் பெற்றவர் என்றாலும், ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் துள்ளலிசை பாடல்களிலும் அவர் தனி முத்திரை பதித்துள்ளார். “நீங்கள் இசையமைத்த ரசிகர்களை குதிக்க வைக்கும் 10 துள்ளலிசை பாடல்கள் எவை? அவை உருவான விதம் என்ன?” என்ற கேள்வியுடன் பிபிசி தமிழ் சார்பில் இமானிடம் உரையாடப்பட்டது. அதற்கு பதிலளித்த இமான், “இதுவரை 125-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளேன். என் இசைப் பயணம் திருப்திகரமாகவே செல்கிறது. இந்த ஆண்டு மட்டும் நான்கு படங்கள் வெளியாக உள்ளன. அதற்கான பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வருகிறேன்” என்று தெரிவித்தார். தொடர்ந்து, தன் இசைப் பயணத்தில் தனக்கு மிகவும் பிடித்த துள்ளலிசை பாடல்களை பட்டியலிட்ட இமான், அவை உருவான பின்னணியை பகிர்ந்துகொண்டார். அப்போது நடிகர் அஜித்துடன் நடந்த ஒரு நினைவுகூரத்தக்க அனுபவத்தையும் அவர் பகிர்ந்தார். “சினிமாவுக்கு புதிதாக வந்த காலத்தில் அஜித் சாருடன் எனக்கு பெரிய பழக்கம் இல்லை. ஒருமுறை ஐஸ்கிரீம் கடையில் அவரை பார்த்தபோது பேசலாமா என தயங்கி நின்றேன். ஆனால் அவரே என்னை அழைத்து பேசினார். என் படங்கள், இசை பற்றி அக்கறையுடன் விசாரித்தது எனக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது” என்று கூறினார். அஜித்துக்காக முதன்முறையாக இசையமைத்த படம் ‘விஸ்வாசம்’. சிறுத்தை சிவா இயக்கிய அந்தப் படத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு துள்ளலிசைப் பாடலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த பாடல் தயாரிக்கப்பட்டது. “முதலில் வேறு பாடகரை பயன்படுத்தலாம் என நினைத்தோம். டெமோவாக நான் பாடிய டிராக் அஜித் சாருக்கும் இயக்குநருக்கும் மிகவும் பிடித்ததால், என் குரலிலேயே பாடல் பதிவு செய்யப்பட்டது” என்று இமான் விளக்கினார். படத்தின் கதைக்கேற்ப தமிழகத்தைச் சேர்ந்த ஹீரோ மும்பையில் வாழும் சூழலில், கொண்டாட்ட மனநிலையில் அந்த பாடல் இடம்பெறுகிறது. அதனால் பாடலுக்கு சிறிது வடஇந்திய சாயல் இருக்க வேண்டும் என முடிவு செய்து, ஆதித்யா காட்வி என்பவரையும் இணைத்து பாட வைத்ததாக அவர் தெரிவித்தார். விவேகா எழுதிய வரிகள் பாடலுக்கு கூடுதல் வலு சேர்த்ததாகவும் கூறினார். ‘விஸ்வாசம்’ வெளியான தினம் சென்னையிலுள்ள திரையரங்கில் முதல் காட்சியை பார்த்ததாக நினைவுகூர்ந்த இமான், “‘அடிச்சு தூக்கு’ பாடலை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடியதை நேரில் பார்த்தபோது மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. இன்றும் அந்த பாடல் அஜித் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருப்பது சந்தோஷம் தருகிறது” என்றார். மேலும், ‘விஸ்வாசம்’ படத்துக்காக தேசிய விருது கிடைத்தபோது மீண்டும் அஜித் சாரை சந்தித்ததாக கூறிய இமான், “‘கண்ணான கண்ணே’ உள்ளிட்ட பாடல்கள் குறித்து அவர் பாராட்டி பேசியது எனக்கு மறக்க முடியாத தருணம்” என்று பகிர்ந்துகொண்டார்.
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன் காரணமாக, திரைப்படத்தின் வெளியீடு மேலும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ படம், முதலில் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழ் தொடர்பான பிரச்சினையால் அந்த வெளியீடு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மத்திய தணிக்கை வாரியம் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி சில மாற்றங்களுடன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்தது. பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களை மேற்கொண்டு, டிசம்பர் 24ஆம் தேதி படம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 29ஆம் தேதி யு/ஏ சான்றிதழ் வழங்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், திடீரென ராணுவம் தொடர்பான சில காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்து புகார்கள் வந்ததை அடுத்து, தணிக்கை வாரிய தலைவர் படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பினார். இதை எதிர்த்து தயாரிப்பு தரப்பு மீண்டும் நீதிமன்றத்தை நாடியது. இதற்கிடையில், ஜனவரி 9ஆம் தேதி தனி நீதிபதி பி.டி. ஆஷா, படத்திற்கு உடனடியாக சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். ஆனால் அதே நாளில் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததை தொடர்ந்து, தலைமை நீதிபதி அமர்வு அந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதன் காரணமாக படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. பின்னர், தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த நிலையில், உச்சநீதிமன்றம் வழக்கில் தலையிட மறுத்து, உயர்நீதிமன்றமே விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என அறிவுறுத்தியது. இதையடுத்து வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்று வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பில், தனி நீதிபதி உடனடியாக சான்றிதழ் வழங்கிய உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டை உயர்நீதிமன்றம் ஏற்றது. தணிக்கை வாரியத்துக்கு போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என்றும், அவர்களின் விளக்கங்களை முழுமையாக கேட்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், படத்தில் பாதுகாப்புப் படை சின்னங்கள் பயன்படுத்தப்பட்டதும், மத உணர்வுகளை பாதிக்கும் வகையிலான வசனங்கள் இருப்பதும் கவலைக்குரியது என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வெளிநாட்டு சக்திகள் இந்தியாவில் மதப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையில் உள்ள வசனங்கள் ஏற்க முடியாதவை என்றும் நீதிபதி அமர்வு கண்டனம் தெரிவித்தது. இதன் அடிப்படையில், இந்த வழக்கை மீண்டும் தனி நீதிபதி பி.டி. ஆஷாவே விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வு வழங்கியது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, ‘ஜனநாயகன்’ திரைப்படம் மீண்டும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, படத்தின் வெளியீடு இன்னும் சில காலம் தள்ளிப்போகும் நிலை உருவாகியுள்ளது.
உலகளாவிய மின்னணு சந்தையில் முக்கிய மாற்றமாக, சோனி நிறுவனம் தனது பிராவியா (Bravia) டிவி மற்றும் வீட்டு பொழுதுபோக்கு வணிகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டை சீனாவின் TCL நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, இரு நிறுவனங்களும் இணைந்து புதிய கூட்டு நிறுவனத்தை உருவாக்க உள்ளன. இந்த புதிய அமைப்பில், TCL 51 சதவீத பங்குகளை வைத்திருக்கும் கட்டுப்பாட்டு நிறுவனமாகவும், சோனி 49 சதவீத பங்குகளுடன் கூட்டாளியாகவும் செயல்படும். இந்த கூட்டு முயற்சியின் செயல்பாடுகள் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தி மற்றும் நிர்வாக மாற்றம் இந்த மாற்றத்தின் மூலம், சோனி நிறுவனம் பிராவியா டிவிகளை நேரடியாக தயாரிப்பதை நிறுத்தும். அதற்கு பதிலாக, TCL நிறுவனத்தின் காட்சி (Display) தொழில்நுட்பங்கள் மற்றும் உற்பத்தி வசதிகள் பயன்படுத்தப்படவுள்ளன. தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப மேலாண்மையை TCL மேற்கொள்ளும் நிலையில், சோனி தனது பிராண்ட் மதிப்பு மற்றும் அறிவுசார் சொத்துகள் (IP) மீது கவனம் செலுத்தும். ஏன் இந்த முடிவு? டிவி சந்தையில் நிலவும் குறைந்த லாப விகிதம் மற்றும் கடும் போட்டி காரணமாக, சோனி தனது நுகர்வோர் மின்னணுப் பிரிவில் நேரடி உற்பத்தியை குறைத்து, அதிக லாபம் தரும் துறைகளில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் செலவுகளை குறைத்து, தொழில்நுட்ப கூட்டாண்மையை பயன்படுத்துவது சோனியின் முக்கிய நோக்கமாக உள்ளது. நுகர்வோருக்கு ஏற்படும் மாற்றம் இந்த மாற்றத்திற்குப் பிறகும், பிராவியா டிவிகள் சந்தையில் தொடரும். ஆனால் அவை TCL தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்படும். அதே நேரத்தில், சோனியின் உயர்தர படத் தரம் மற்றும் ஆடியோ தரம் தொடர்பான பிராண்ட் நற்பெயர் தொடரும் என தெரிவிக்கப்படுகிறது. மொத்தமாக சோனி, பிராவியா டிவி வணிகத்தின் நிர்வாக பொறுப்புகளை TCL-க்கு ஒப்படைத்தாலும், தனது பிராண்டை பாதுகாத்து கொண்டு, எதிர்காலத்தில் அதிக லாபம் தரக்கூடிய துறைகளில் கவனம் செலுத்தும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளது.
குறைந்த விலையில் சக்திவாய்ந்த அம்சங்கள்? சியோமி நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் அறிமுகப்படுத்திய Redmi Pad 2 Pro டேப்லெட், விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் இந்திய அறிமுகம் ஜனவரி 6ஆம் தேதி நடைபெறும் என தொழில்நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த டேப்லெட்டின் இந்திய விலை தொடர்பான விவரங்களும் தற்போது வெளியாகி வருகின்றன. அதன்படி, 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட மாடல் இந்தியாவில் சுமார் ரூ.25,000 விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 8GB ரேம் / 128GB ஸ்டோரேஜ் கொண்ட மற்றொரு வேரியன்ட் ரூ.28,000 விலையிலும், 8GB ரேம் / 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஹை-என்ட் மாடல் ரூ.30,000 வரை விலையிடப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விலை வரம்பில் Redmi Pad 2 Pro டேப்லெட் அறிமுகமானால், மிட்-ரேஞ்ச் டேப்லெட் சந்தையில் சியோமிக்கு பெரிய போட்டி முன்னிலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.50-ல் இருந்து ரூ.75 ஆக மாற்றம் – UIDAI அறிவிப்பு பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறுவதற்கான கட்டணத்தை உயர்த்தி இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் படி, இனிமேல் புதிய பிளாஸ்டிக் ஆதார் அட்டைக்காக விண்ணப்பிப்பவர்கள் ரூ.75 கட்டணமாக செலுத்த வேண்டும். இதற்கு முன், மை ஆதார் இணையதளம் அல்லது எம்-ஆதார் செயலி மூலம் பிளாஸ்டிக் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்தால் ரூ.50 மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த மாதம் 1ஆம் தேதி முதல் அந்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக UIDAI தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ ஆதார் இணையதளம் வழியாக புதிய ஆதார் அட்டை பெற அல்லது மறுபிரதி பெற விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இந்த புதிய கட்டண விகிதம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம், ஆதார் சேவை செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள் ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புத்தம் புதிய Reno 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சீரிஸில் Reno 15c, Reno 15, Reno 15 Pro மற்றும் Reno 15 Pro Mini என மொத்தம் 4 மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. செயல்திறன் & மென்பொருள் Reno 15 சீரிஸில் இடம்பெற்றுள்ள மொபைல்கள், உயர்தர செயல்திறனை வழங்கும் வகையில் Snapdragon மற்றும் MediaTek Dimensity சிப்செட்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன. அனைத்து மாடல்களும் Android 16 அடிப்படையிலான ColorOS 16 இயங்குதளத்தில் செயல்படுகின்றன. கேமரா & பேட்டரி இந்த சீரிஸின் முக்கிய அம்சமாக, 200MP பிரதான கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேம்பட்ட இமேஜிங் அனுபவத்தை ஒப்போ வழங்குவதாக தெரிவித்துள்ளது. மேலும், 6,500mAh திறன் கொண்ட பேட்டரி இடம்பெற்றுள்ளதுடன், Reno 15 Pro மாடல்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இந்தியாவில் விலை விவரம் Reno 15c 8GB + 256GB – ரூ.34,999 12GB + 256GB – ரூ.37,999 Reno 15 8GB + 256GB – ரூ.45,999 12GB + 256GB – ரூ.48,999 12GB + 512GB – ரூ.53,999 (மற்ற Pro மாடல்களின் விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்) முடிவு பெரும் பேட்டரி திறன், உயர்தர கேமரா மற்றும் புதிய Android 16 அனுபவத்துடன், ஒப்போ Reno 15 சீரிஸ் இந்திய சந்தையில் போட்டியை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி: நடப்பு 2025–26 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7.4% வளர்ச்சி அடையும் என மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இந்த ஆய்வறிக்கையை, வரும் 2026–27 மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். உலகளவில் புவிசார் அரசியல் பதற்றம், வர்த்தக மோதல்கள் போன்ற காரணங்களால் பொருளாதார சூழல் பலவீனமாக இருந்தாலும், இந்திய பொருளாதாரம் தனித்துவமாக வலுவாக செயல்படுகிறது என ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. ஜிடிபி வளர்ச்சி முன்னறிவு 2025–26 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி: 7.4% 2026–27 நிதியாண்டில் வளர்ச்சி: 6.8% முதல் 7.2% வரை தொடர்ந்து 4-வது ஆண்டாக இந்தியா உலகின் வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக நீடிக்கிறது சேவைத் துறை மற்றும் வருவாய் நிலை சேவைத் துறை வளர்ச்சி: 9.1% மத்திய அரசின் வருவாய்: ஜிடிபியின் 9.2% நேரடி வரி செலுத்துவோர் எண்ணிக்கை: 9.2 கோடி 2025 ஏப்ரல்–டிசம்பர் காலத்தில் ஜிஎஸ்டி வசூல்: ரூ.17.4 லட்சம் கோடி இது கடந்த ஆண்டை விட 6.7% அதிகம் முதலீடு மற்றும் கடன் நிலை மத்திய அரசின் மூலதன செலவினம்: ஜிடிபியின் 4% கடன்–ஜிடிபி விகிதம்: 2020-க்கு பிறகு 7.1% குறைவு அதிக பொது முதலீடுகள் இருந்தபோதும் நிதி நிலைத்தன்மை பாதுகாக்கப்பட்டுள்ளது வங்கி மற்றும் நிதித் துறை மொத்த வாராக்கடன் விகிதம்: 2.2% நிகர வாராக்கடன் விகிதம்: 0.5% 2025 டிசம்பரில் வங்கி கடன் வளர்ச்சி: 14.5% ஜன் தன் திட்டம்: 55.02 கோடி கணக்குகள் முத்ரா திட்டம்: 55.45 கோடி பேருக்கு ரூ.36.18 லட்சம் கோடி முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை வளர்ச்சி புதிய டிமேட் கணக்குகள் (9 மாதங்களில்): 2.35 கோடி மொத்த டிமேட் கணக்குகள்: 21.6 கோடி பரஸ்பர நிதி முதலீட்டாளர்கள்: 5.9 கோடி இதில் 2-ம் கட்ட நகரங்களைச் சேர்ந்தவர்கள்: 3.5 கோடி வேளாண்மை மற்றும் சமூக முன்னேற்றம் 2024–25 உணவு தானிய உற்பத்தி: 3,577.3 லட்சம் மெட்ரிக் டன் பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தொகை: ரூ.4.09 லட்சம் கோடி பன்முக வறுமை விகிதம்: 55.3% → 11.28% (2005–06 முதல் 2022–23 வரை) உற்பத்தி, எரிசக்தி மற்றும் வேலைவாய்ப்பு PLI திட்டம் (14 துறைகள்): முதலீடு: ரூ.2 லட்சம் கோடி வேலைவாய்ப்பு: 12.6 லட்சம் சூரிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இந்தியா: உலகில் 3-வது இடம் வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் முதலீடு 2025 நிதியாண்டில் மொத்த ஏற்றுமதி: 825.3 பில்லியன் டாலர் சேவை ஏற்றுமதி வளர்ச்சி: 13.6% வெளிநாடுகளில் இருந்து வரும் பணமாற்றம்: 135.4 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி கையிருப்பு: 701.4 பில்லியன் டாலர் இது 11 மாத இறக்குமதியை சமாளிக்க போதுமானது அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 50% வர்த்தக வரி காரணமாக ஏற்றுமதி பாதிப்பு இதை சரிசெய்ய இந்தியா–அமெரிக்கா தாராள வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது இதுவரை 6 சுற்று பேச்சுவார்த்தைகள் இந்த ஆண்டுக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்ப்பு டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த பரிந்துரை குழந்தைகளின் இணையப் பயன்பாட்டை கட்டுப்படுத்த தீய உள்ளடக்கங்களில் இருந்து பாதுகாக்க பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது
வருங்கால வைப்பு நிதி (Provident Fund – PF) என்பது சம்பளம் பெறும் ஊழியர்களின் முக்கியமான நீண்டகால சேமிப்பாகும். ஆனால், இந்த PF தொகையை எப்போது எடுக்கலாம், எவ்வளவு எடுக்கலாம் என்பதில் பலருக்கும் நீண்ட காலமாக குழப்பம் இருந்து வந்தது. விதிகள் அதிகமாகவும், சேவை கால நிபந்தனைகள் சிக்கலாகவும் இருந்ததால், அவசர நேரங்களிலும் தங்களுக்கே உரிய பணத்தை எடுக்க முடியாமல் பல ஊழியர்கள் சிரமப்பட்டனர். இந்த நிலையை மாற்றும் வகையில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், PF பணம் எடுக்கும் நடைமுறை இப்போது மிகவும் தெளிவாகவும் எளிதாகவும் மாற்றப்பட்டுள்ளது. 13 பிரிவுகளுக்கு பதிலாக 5 முக்கிய பிரிவுகள் முன்னதாக, PF பணம் எடுப்பதற்கு சுமார் 13 விதமான காரணப் பிரிவுகள் இருந்தன. ஒவ்வொரு பிரிவுக்கும் 2 முதல் 7 ஆண்டுகள் வரை மாறுபடும் சேவை கால நிபந்தனைகள் இருந்ததால், பொதுமக்கள் அவற்றை புரிந்துகொள்வதே கடினமாக இருந்தது. புதிய திருத்தங்களின் படி, EPFO இந்த 13 பிரிவுகளை 5 முக்கிய பிரிவுகளாக குறைத்துள்ளது. இதனால் விதிகள் எளிமையாகி, எந்த சூழ்நிலையில் எவ்வளவு தொகையை எடுக்கலாம் என்பது தெளிவாக விளங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. ஒரு ஆண்டு சேவை போதுமானது இந்த மாற்றங்களில் முக்கியமான ஒன்று, குறைந்தபட்ச சேவை காலம் தொடர்பான எளிமைப்படுத்தலாகும். தற்போது, பெரும்பாலான பகுதி அளவு PF பணம் எடுப்பதற்கு, உறுப்பினர் குறைந்தபட்சம் 12 மாதங்கள் (ஒரு ஆண்டு) சேவை செய்திருந்தாலே போதும். முன்பு, பணம் எடுக்கும் காரணத்தைப் பொறுத்து சேவை காலம் மாறுபட்டதால் ஏற்பட்ட குழப்பம், இந்த புதிய விதியால் பெரும்பாலும் நீக்கப்பட்டுள்ளது. அதிக தொகை எடுத்துக்கொள்ளும் வசதி முன்னதாக, PF-இல் இருந்து பகுதி அளவாக எடுக்கும்போது, ஊழியரின் சொந்த பங்களிப்பிற்கே பெரும்பாலும் அனுமதி வழங்கப்பட்டது. அதுவும் 50% அல்லது 100% என்ற வரம்புடன் இருந்தது. புதிய விதிகளின் கீழ், ஊழியர் மற்றும் நிறுவனத்தின் பங்களிப்புகள், அதற்கான வட்டியுடன் சேர்த்து எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில், உறுப்பினர்கள் தங்களின் மொத்த PF இருப்பில் இருந்து 75% வரை எடுத்துக்கொள்ள முடியும். 100% PF தொகையை எப்போது எடுக்கலாம்? ஒரு ஆண்டு சேவைக்குப் பிறகு, கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் முழு PF தொகையையும் (100%) எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது: உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கான மருத்துவச் செலவுகள் குழந்தைகளின் கல்விச் செலவுகள் திருமணச் செலவுகள் வீடு வாங்குதல் அல்லது வீடு கட்டுதல் வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துதல் பெரிய அளவிலான வீட்டுப் பழுதுபார்ப்பு பணிகள் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், காரணம் குறிப்பிடாமல் கூட பணம் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. இருப்பினும், ஒரு நிதியாண்டில் இந்த வசதியை எத்தனை முறை பயன்படுத்தலாம் என்பதற்கு வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன. ஓய்வூதிய சேமிப்பை பாதுகாக்கும் கட்டுப்பாடுகள் PF விதிகள் நெகிழ்வாக மாற்றப்பட்டிருந்தாலும், நீண்டகால ஓய்வூதிய சேமிப்பை பாதுகாக்க EPFO சில கட்டுப்பாடுகளை தொடர்ந்து வைத்துள்ளது. அடிக்கடி பணம் எடுப்பதைத் தடுக்கும் வகையில், PF இருப்பில் குறைந்தபட்சமாக ஒரு பகுதி (சுமார் 25%) பாதுகாக்கப்படும் விதத்தில் விதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அடிக்கடி PF பணம் எடுப்பதால், குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் ஊழியர்கள், கூட்டு வட்டியின் நீண்டகால பலன்களை இழக்கக்கூடும் என்பதையும் EPFO கவனத்தில் கொண்டுள்ளது. வேலை இழந்தவர்களுக்கு சிறப்பு நிவாரணம் வேலை இழந்த உறுப்பினர்களுக்கும் இந்த புதிய விதிகள் முக்கிய நிவாரணமாக அமைகின்றன. வேலை இழந்த உடனேயே, PF இருப்பில் இருந்து 75% வரை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டு வரை புதிய வேலை கிடைக்காவிட்டால், மீதமுள்ள தொகையையும் முழுமையாக எடுத்துக்கொள்ளலாம். இது வேலை இழப்பு காலத்தில் ஏற்படும் நிதிச் சிரமங்களை ஓரளவு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில சூழ்நிலைகளில் முழு PF தொகை மேலும், கீழ்க்கண்ட நிலைகளில் 100% PF தொகையை திரும்பப் பெற அனுமதி உண்டு: 55 வயதில் ஓய்வு பெறுதல் நிரந்தர உடல் ஊனம் பணிநீக்கம் விருப்ப ஓய்வு (VRS) வெளிநாட்டில் நிரந்தரமாக குடியேறுதல் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) மாற்றமில்லை இந்த புதிய மாற்றங்கள் PF பணம் எடுப்பதற்கான விதிகளில் மட்டுமே பொருந்தும். ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (EPS) தொடர்பான விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன் பணியிலிருந்து விலகும் உறுப்பினர்கள் EPS தொகையை ஒரே முறையாக பெறலாம். மாதாந்திர ஓய்வூதியம் பெற, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவை என்பது இன்னமும் கட்டாயமாகும். முடிவாக EPFO கொண்டு வந்துள்ள இந்த எளிமைப்படுத்தப்பட்ட விதிகள், PF பணம் எடுக்கும் செயல்முறையை வேகமாகவும், வெளிப்படையாகவும் மாற்றும் வகையில் அமைந்துள்ளன. குறுகிய கால அவசர தேவைகளுக்கும், நீண்டகால ஓய்வூதியப் பாதுகாப்புக்கும் இடையில் சமநிலையை உருவாக்குவதே இந்த மாற்றங்களின் முக்கிய நோக்கமாகும். இது PF உறுப்பினர்களுக்கு நடைமுறையில் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாள்தோறும் பொதுமக்கள் அதிகமாக எதிர்கொள்ளும் பிரச்னைகளில் ஒன்று “சில்லறை இல்லை” என்பதுதான். கடைகள், பேருந்துகள், ஆட்டோக்கள் என எங்கும் இந்த சிக்கல் தொடர்ந்தே வருகிறது. இந்த நிலைக்கு தீர்வு காணும் வகையில், மத்திய அரசு புதிய வகை ஏடிஎம் வசதியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. பொதுவாக, தற்போது இயங்கும் ஏடிஎம் இயந்திரங்களில் 100, 200, 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. பெரிய மதிப்புள்ள நோட்டுகளைப் பெற்றுக் கொண்ட பிறகு, அவற்றை சில்லறையாக மாற்றுவதற்கு மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக அன்றாட தேவைகளில் இது பெரும் தொந்தரவாக மாறியுள்ளது. இந்த சிக்கலை கருத்தில் கொண்டு, சில்லறை நோட்டுகளை வழங்கும் புதிய “ஹைப்ரிட் ஏடிஎம்” முறையை கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தின் மூலம், பயனர்கள் தங்களிடம் உள்ள பெரிய மதிப்புள்ள நோட்டுகளைச் செலுத்தி, அதற்கு மாற்றாக சிறிய மதிப்புள்ள நோட்டுகளைப் பெற முடியும். உதாரணமாக, 500 ரூபாய் நோட்டைக் கொண்டு, 10, 20, 50 ரூபாய் நோட்டுகளாக தேவையான அளவில் மாற்றிக் கொள்ளும் வசதி இதில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இதனால், சில்லறை தேவைப்படும் நேரங்களில் கடைகள் அல்லது பிற இடங்களைச் சுற்றித் தேடும் அவசியம் இல்லாமல் போகும். இந்த புதிய ஹைப்ரிட் ஏடிஎம் திட்டம் தற்போது சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக, மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் இந்த ஏடிஎம்கள் பரிசோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த முயற்சி வெற்றிகரமாக அமையும் பட்சத்தில், நாடு முழுவதும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களின் அன்றாட நிதி சிக்கல்களை எளிதாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த ஹைப்ரிட் ஏடிஎம் திட்டம், எதிர்காலத்தில் சில்லறை பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக அமையக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே நீண்ட காலமாக நடைபெற்று வந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தற்போது முடிவுக்கு வரும் நிலையில் உள்ளன. சர்வதேச பொருளாதார வட்டாரங்களில் “Mother of Deals” என அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம், இந்தியாவின் வர்த்தக வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாக அமையப்போகிறது. இந்தியா–ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைகள் முதன்முறையாக 2007ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. பல்வேறு அரசியல், பொருளாதார காரணங்களால் நீண்ட காலமாக இழுபறியில் இருந்த இந்த ஒப்பந்தம், சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இறுதித் தீர்மான கட்டத்தை எட்டியுள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், “இந்தியா இதுவரை மேற்கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்களில் மிக முக்கியமானதும், மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதும் இதுவாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், இந்திய ஏற்றுமதி, முதலீடு, தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெறவுள்ள 16வது இந்தியா–ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டின் போது, இந்த ஒப்பந்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் இந்தியா வந்துள்ளனர். இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தால், இந்திய நிறுவனங்களுக்கு ஐரோப்பிய சந்தைகள் மேலும் திறக்கப்படுவதோடு, தொழில்நுட்பம், உற்பத்தி, சேவைத் துறைகளில் புதிய வாய்ப்புகள் உருவாகும் என கூறப்படுகிறது. அதேபோல், இந்தியா–ஐரோப்பிய யூனியன் உறவுகள் புதிய உயரத்தை எட்டும் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சென்னை: பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிறுவனர், புகழ்பெற்ற யோகா குரு மற்றும் ஆரோக்கிய நிபுணரான சுவாமி ராம்தேவ், நோயற்ற மற்றும் சமநிலையான வாழ்க்கையை வாழ உதவும் சில முக்கியமான வாழ்க்கைமுறை ஆலோசனைகளை சமீபத்திய ஃபேஸ்புக் நேரலை அமர்வில் பகிர்ந்துள்ளார். இன்றைய நவீன வாழ்க்கை முறையால் செரிமானக் கோளாறுகள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் உள்ளிட்ட வாழ்க்கை முறை நோய்கள் அதிகரித்து வருவதாகவும், இவை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தச் சூழலில், உணவு மற்றும் அன்றாட பழக்கவழக்கங்கள் மனித உடலின் இயற்கை தேவைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும், தவறான உணவு பழக்கம் தான் பெரும்பாலான நோய்களின் அடிப்படை காரணம் என்றும் சுவாமி ராம்தேவ் விளக்கினார். நோயற்ற வாழ்க்கைக்கான முக்கிய வழிகாட்டுதல்கள்: 1. பசி ஏற்பட்ட பிறகே உணவு: உண்மையான பசி ஏற்படும் போதே உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். நேரம் ஆகிவிட்டது என்பதற்காக அல்லது பழக்கத்தின் காரணமாக உண்பதை தவிர்க்க வேண்டும். 2. எளிய மற்றும் இயற்கை உணவுகள்: பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக எண்ணெய் மற்றும் சர்க்கரை கொண்ட உணவுகளை தவிர்த்து, காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள் போன்ற இயற்கை உணவுகளை முன்னுரிமை அளிக்க வேண்டும். 3. சரியான நேரத்தில் உணவு: சூரியன் மறையும் முன்பே இரவு உணவை முடித்துக் கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் கனமான உணவுகளை தவிர்ப்பது செரிமானத்திற்கு உதவும். 4. மெதுவாக, கவனத்துடன் உண்பது: டிவி, மொபைல் போன்ற கவனச்சிதறல்களுடன் உண்பதை தவிர்த்து, உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும். 5. தினசரி யோகா மற்றும் பிராணாயாமம்: உடலையும் மனதையும் சமநிலைப்படுத்த தினமும் குறைந்தது 20–30 நிமிடங்கள் யோகா, பிராணாயாமம் மற்றும் தியானம் செய்ய வேண்டும். 6. போதிய தூக்கம்: இரவு நேரங்களில் 7–8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம். தாமதமாக உறங்குவது மற்றும் குறைவான தூக்கம் பல நோய்களுக்கு வழிவகுக்கும். 7. மனஅழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல்: அதிக மன அழுத்தம் உடல் நோய்களை ஏற்படுத்தும் முக்கிய காரணமாகும். நேர்மறை சிந்தனை, தியானம் மற்றும் அமைதியான வாழ்க்கை முறை அவசியம். சரியான உணவு, ஒழுங்கான வாழ்க்கை முறை மற்றும் மன சமநிலை ஆகியவை ஒருவரை நோயற்ற, வலியற்ற மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வழிநடத்தும் என சுவாமி ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
நாள் முழுக்க அஜீரணம், நெஞ்சு எரிச்சல் ஏற்படலாம் – சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை சென்னை: உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் எல்லா பழங்களையும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதல்ல என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சில பழங்களில் உள்ள அதிக அமிலத் தன்மை மற்றும் சர்க்கரை அளவு காரணமாக, அவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக்கொண்டால் அஜீரணம், வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், வாந்தி உணர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் நாள் முழுக்க உடல் சோர்வு மற்றும் அசௌகரியம் ஏற்படும் அபாயம் உள்ளது. வெறும் வயிற்றில் தவிர்க்க வேண்டிய பழங்கள் 1. ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை இந்த பழங்களில் அதிக அமிலத்தன்மை இருப்பதால், நெஞ்சு எரிச்சல் வயிற்றில் எரிச்சல் கேஸ்ட்ரைட்டிஸ் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு அதிகம். 2. வாழைப்பழம் வாழைப்பழம் சத்தானது தான். ஆனால் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்தத்தில் மக்னீசியம் அளவு திடீரென அதிகரிக்கும் இதய துடிப்பில் மாற்றம் சோர்வு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 3. மாம்பழம் மாம்பழத்தில் இயற்கையான சர்க்கரை அதிகம் உள்ளது. வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த சர்க்கரை திடீரென உயரும் வயிற்று உப்புசம் செரிமான கோளாறு ஏற்படலாம். 4. அன்னாசி அன்னாசியில் உள்ள ப்ரோமெலின் என்ற எஞ்சைம் காரணமாக, வயிற்று வலி அலர்ஜி நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். 5. தர்பூசணி நீர் சத்து அதிகம் இருந்தாலும், வெறும் வயிற்றில் சாப்பிடும்போது செரிமானம் பாதிக்கப்படும் வயிற்றில் நீர்ச்சத்து அதிகரித்து சோர்வு ஏற்படும் காலை நேரத்தில் எந்த பழங்கள் நல்லது? வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற பழங்கள்: ஆப்பிள் பப்பாளி பேரிக்காய் மாதுளை இந்த பழங்கள் செரிமானத்தை மேம்படுத்தி உடலுக்கு சக்தி தரும். நிபுணர்கள் தரும் ஆலோசனை காலை எழுந்ததும் முதலில் ஒரு கிளாஸ் வெந்நீர் குடிக்கவும் சிறிது நேரம் கழித்து பழங்கள் சாப்பிடுவது சிறந்தது அமிலத் தன்மை அதிகமுள்ள பழங்களை உணவுக்குப் பிறகு எடுத்துக்கொள்ளலாம் ஏற்கனவே வயிற்று பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும் முடிவாக பழங்கள் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை தான். ஆனால் எதை, எப்போது சாப்பிடுகிறோம் என்பதே முக்கியம். வெறும் வயிற்றில் தவறான பழங்களை சாப்பிட்டால், அது உடலுக்கு நன்மை அல்ல; நாள் முழுக்க தொந்தரவாக மாறும்.
திருமணத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுவது சாந்தி முகூர்த்தம். இந்த நிகழ்வில் மணமகனும் மணமகளும் தனியாக இருப்பதற்காக அறை அலங்கரிக்கப்பட்டு, அங்கு பால் கொண்டு செல்லும் சம்பிரதாயம் வழக்கமாக பின்பற்றப்படுகிறது. இந்த வழக்கம் ஏன் உருவானது என்பது குறித்து பாரம்பரியமும் அறிவியல் காரணங்களும் உள்ளன. பாரம்பரிய நம்பிக்கை என்ன? பால் என்பது இந்திய பண்பாட்டில் • தூய்மை • வளம் • செழிப்பு • நல்ல தொடக்கம் என்ற அடையாளமாகக் கருதப்படுகிறது. புதிதாக வாழ்க்கையைத் தொடங்கும் தம்பதியருக்கு இனிமையான, அமைதியான, செழிப்பான வாழ்க்கை அமைய வேண்டும் என்ற நல்வாழ்த்தின் அடையாளமாக பால் வழங்கப்படுகிறது. ஆயுர்வேத அடிப்படையிலான காரணம் ஆயுர்வேதத்தின் படி, பால் என்பது • உடலை குளிர்ச்சிப்படுத்தும் • நரம்புகளை அமைதிப்படுத்தும் • மன அழுத்தத்தை குறைக்கும் • உடல் சோர்வை நீக்கும் தன்மை கொண்டது. திருமண நாளில் ஏற்பட்ட உடல் சோர்வு, மன அழுத்தம் ஆகியவற்றை குறைத்து, உடலும் மனமும் அமைதியாக இருக்க பால் உதவுகிறது. மனநல ரீதியான விளக்கம் திருமணம் என்பது இருவருக்கும் பெரிய மாற்றம். • புதிய சூழல் • புதிய உறவு • சமூக அழுத்தம் இதனால் மனஅழுத்தம் ஏற்படலாம். பால் குடிப்பதால் உடலில் செரோட்டோனின் போன்ற அமைதியை தரும் ஹார்மோன்கள் செயல்பட்டு மனதை நிம்மதியாக வைத்திருக்க உதவுகிறது. இனப்பெருக்க ஆரோக்கியம் தொடர்பான நம்பிக்கை பால் உடலுக்கு வலிமை தரும் உணவாக கருதப்படுகிறது. மணமக்கள் ஆரோக்கியமாக, நல்ல சந்ததியை பெற வேண்டும் என்ற விருப்பத்தின் அடையாளமாகவும் இந்த சம்பிரதாயம் உருவானதாக கூறப்படுகிறது. அறிவியல் பார்வையில் பாலில் உள்ள • கால்சியம் • புரதச்சத்து • ட்ரிப்டோபேன் ஆகியவை தூக்கத்தை மேம்படுத்தவும், நரம்புகளை தளர்த்தவும் உதவுகின்றன. இதனால் சாந்தி முகூர்த்தத்தின் போது இயல்பான அமைதி ஏற்படுகிறது. முடிவாக சாந்தி முகூர்த்தத்திற்கு பால் எடுத்துச் செல்லும் வழக்கம் என்பது மூடநம்பிக்கை அல்ல. அது • உடல் ஆரோக்கியம் • மன அமைதி • நல்ல தொடக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாரம்பரிய பழக்கமாகும். தலைமுறைகள் கடந்து வந்த இந்த சம்பிரதாயம், அறிவியலோடும் ஒத்துப்போகும் ஒரு நெறியாகவே பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு மூலம் வழங்கப்படும் ஆயுஷ்மான் இந்தியா – மூத்த குடிமக்கள் ஓய்வு நல அட்டை திட்டத்தின் கீழ், வயது 60 மேலானவர்களுக்கு மருத்துவ செலவுகளுக்கான 5 லட்சம் ரூபாய் வரை கவரேஜ் வழங்கப்படுகிறது. இந்த அட்டை மூலம் நோயாளிகளை விடுமுறை வைத்தியச் சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் அவசர மருத்துவ செலவுகளுக்கு உதவி கிடைக்கும். முதன்மை அம்சங்கள் ஆரோக்ய கவரேஜ்: ரூ.5,00,000 வருடத்திற்கு ஒரு தடவை மருத்துவத்தொகை உதவி அரசு மற்றும் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் பயன்படும் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு நலமாக உருவாக்கப்பட்டது யார் அதை பெற முடியும்? இந்திய குடிமக்கள் வயது 60 வருடங்களுக்கு மேற்பட்டோர் ஆதார்/ஐடி யார்/மொபைல் எண் இணைப்பு உள்ளோர் விண்ணப்பிப்பது எப்படி? இதனைப் பெற முடியும் இரண்டு வழிகளில்: 1. ஆன்லைன் – அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆயுஷ்மான் இந்தியா அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும் Apply for Ayushman Card (Senior Citizen) தேர்வு செய்யவும் ஆதார் மற்றும் விவரங்களை உள்ளிடவும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும் அங்கீகாரம் வந்தவுடன் அட்டை பதிவிறக்கம் செய்யலாம் 2. மொபைல் செயலி மூலம் Ayushman Bharat App ஐ Google Play / App Store இலிருந்து தரவிறக்கவும் விண்ணப்ப பிரிவைத் திறந்து Senior Citizen Card தேர்வு செய்யவும் ஆதார் & முகவரிச் சான்றிதழ் உள்ளிடவும் தேவையான படங்களை பதிவேற்றவும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும் அதிகாரப்பூர்வ தரவுகள் மற்றும் ஆவணங்களை சேர்க்கும்போது தவறுகள் வராதபடி கவனமாக செயல்பட வேண்டுமென மருத்துவ மற்றும் சமூக நல அலுவலர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த ஆயுஷ்மான் அட்டை திட்டம் மூத்த குடிமக்களுக்கு மருத்துவ செலவுப் பருமனில் பெரும் நன்மையை வழங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், அந்த தோல்வி குறித்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம் அளித்துள்ளார். அணியின் அணுகுமுறை திட்டமிட்டதாகவும், வீரர்களை சோதிக்கும் நோக்கத்திலேயே அந்த வகையில் விளையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. இதற்கு முன் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நியூசிலாந்து அணி, இந்திய மண்ணில் சாதனை வெற்றியை பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்று வரும் டி20 தொடரில், முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை ஏற்கனவே கைப்பற்றியது. இந்த சூழலில், இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 216 ரன்கள் என்ற கடின இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது. இலக்கை துரத்திய இந்திய அணி தொடக்கத்திலேயே தடுமாறியது. 82 ரன்களுக்குள் ஐந்து முக்கிய விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி கடும் அழுத்தத்தில் சிக்கியது. இருப்பினும், ஷிவம் துபே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 15 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 7 சிக்சர்களுடன் 23 பந்துகளில் 65 ரன்கள் குவித்து நியூசிலாந்து அணியை அச்சுறுத்தினார். ஆனால் இறுதியில் அதிர்ஷ்டம் கை கொடுக்காமல், பந்து ஸ்டம்ப்பை தாக்க அவர் அவுட்டானார். இதன் முடிவில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், இந்த தோல்வி திட்டமிட்ட சோதனையின் ஒரு பகுதியாக இருந்ததாக தெரிவித்தார். அவர் கூறுகையில், “இந்த போட்டியில் வேண்டுமென்றே ஆறு பேட்ஸ்மேன்கள் மற்றும் ஐந்து பிரத்யேக பந்து வீச்சாளர்களுடன் விளையாடினோம். நம்மை நாமே சவால் செய்யவே இந்த அணியமைப்பை தேர்வு செய்தோம். பெரிய இலக்கை சேஸ் செய்யும் போது ஆரம்பத்திலேயே இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகள் விழுந்தால், அணி எப்படி பதிலளிக்கிறது என்பதை அறிய விரும்பினோம்” என்றார். மேலும் அவர், “உலகக் கோப்பை அணியில் இடம்பெறவுள்ள அனைத்து வீரர்களுக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதும் எங்களின் நோக்கம். முதலில் பேட்டிங் செய்யும்போது நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். ஆனால் பெரிய இலக்கை துரத்தும் சூழலில் வீரர்கள் பொறுப்பேற்று விளையாடுகிறார்களா என்பதை சோதிக்க இந்த போட்டி உதவியாக இருந்தது. மொத்தத்தில் இது அணிக்கான ஒரு நல்ல அனுபவம்” எனத் தெரிவித்தார்.
நாக்பூர்: டி20 உலகக் கோப்பை அணியில் எதிர்பாராத வகையில் இடம் பெற்ற ரிங்கு சிங், தற்போது மீண்டும் பிளேயிங் லெவனில் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி நாக்பூரில் நடைபெற உள்ள நிலையில், அவரது தேர்வு குறித்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் தீவிர விவாதம் நடைபெற்று வருகிறது. டி20 சர்வதேச போட்டிகளில் டெத் ஓவர்களில் இந்திய வீரர்களில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் பேட்ஸ்மேன்களில் ரிங்கு சிங் முக்கியமானவராக பார்க்கப்படுகிறார். 17 முதல் 20 ஓவர்கள் வரை இந்திய வீரர்கள் எடுத்த ரன்களைப் பார்க்கும் போது, சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோஹித் சர்மாவுக்குப் பிறகு, அதிக ஸ்ட்ரைக் ரேட்டை கொண்ட வீரர்களில் ரிங்கு சிங் முன்னணி இடத்தில் உள்ளார். டாப் ஆர்டரில் விளையாடும் சூர்யகுமார், ரோஹித் போலல்லாமல், கீழ்வரிசையில் வந்து போட்டியின் போக்கை மாற்றும் திறன் ரிங்கு சிங்கின் மிகப்பெரிய பலமாகும். இந்த ஃபார்மேட்டில் இந்திய அணியின் நம்பகமான ஃபினிஷராக கருதப்படும் ரிங்கு சிங், டெத் ஓவர்களில் உயர்ந்த சராசரியையும் வைத்துள்ளார். இதனால் கடைசி ஓவர்களில் ரன்களை வேகமாக சேர்க்கக்கூடிய வீரராக அவர் திகழ்கிறார். ஆனால் சமீப காலமாக அணித் தேர்வில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, தொடர்ச்சியான வாய்ப்புகளை அவர் பெற முடியாமல் போயுள்ளது. ஷுப்மன் கில் மீண்டும் டாப் ஆர்டருக்கு வந்ததும், விக்கெட் கீப்பருக்கான இடம் மிடில் ஆர்டரில் உருவானதும், ரிங்கு சிங்கின் இடம் பாதிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களில் மிகக் குறைந்த டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடிய ரிங்கு சிங், ஆசியக் கோப்பை இறுதியில் அடித்த தீர்மானமான பவுண்டரியால் மட்டும் கவனம் பெற்றார். தற்போது சஞ்சு சாம்சன் மீண்டும் டாப் ஆர்டரில் விளையாட வாய்ப்பு பெற்றுள்ளதால், ரிங்கு சிங்கிற்கு 6 அல்லது 7வது இடத்தில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆனால் அதே இடத்திற்காக இன்னொரு வீரருடன் கடும் போட்டி உருவாகியுள்ளது. ஆசியக் கோப்பைக்கு பிறகு இந்தியா விளையாடிய பெரும்பாலான டி20 போட்டிகளில் ஷிவம் துபே தொடர்ந்து அணியில் இடம்பெற்று வருகிறார். பேட்டிங்கில் பெரிய நிலைத்தன்மை இல்லாவிட்டாலும், தேவையான நேரங்களில் அதிரடி காட்டும் திறன் அவருக்கு உள்ளது. அதைவிட முக்கியமாக, அவர் வழங்கும் மீடியம் பேஸ் பந்துவீச்சு அணியின் சமநிலைக்கு உதவுகிறது. இதன் காரணமாக, ரிங்கு சிங் – ஷிவம் துபே என்ற இருவரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்த முடிவு பெரும்பாலும் ஆடுகளத்தின் தன்மை மற்றும் போட்டி சூழலைப் பொறுத்தே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷிவம் துபே அணியில் இருந்தால், இந்திய அணி கூடுதல் வேகப்பந்துவீச்சாளரை இணைத்து, குல்தீப் யாதவை மூன்றாவது சுழற்பந்துவீச்சாளராக பயன்படுத்த முடியும். மேலும், ஆல்ரவுண்டர்களை விரும்பும் அணித் தத்துவம் காரணமாக, தேர்வாளர்கள் துபேவுக்கு முன்னுரிமை அளிக்கலாம் என்ற கணிப்பும் உள்ளது. மொத்தத்தில், ரிங்கு சிங் மற்றும் ஷிவம் துபே ஆகியோருக்கிடையேயான இந்த போட்டி, இந்திய டி20 அணியின் சமநிலையை தீர்மானிக்கும் முக்கிய முடிவாக அமையும். தனது ஃபினிஷிங் திறமையால் ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ள ரிங்கு சிங், வாய்ப்பு கிடைத்தால் அதை முழுமையாக பயன்படுத்தி மீண்டும் அணியில் நிரந்தர இடம் பிடிப்பாரா என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
லடாக்: ஆறாவது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டிகள் 2026 லடாக்கின் லே நகரில் ஜனவரி 20 அன்று கோலாகலமாகத் தொடங்கியது. நவாங் டோர்ஜன் ஸ்டோப்டன் (NDS) மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டிகள் ஜனவரி 26 வரை நடைபெறுகின்றன. பனிச்சறுக்கு, ஐஸ் ஹாக்கி உள்ளிட்ட குளிர்கால விளையாட்டுகள் இதில் இடம்பெறுகின்றன. லடாக் இந்தப் போட்டிகளை நடத்துவது இது மூன்றாவது முறையாகும். தொடக்க விழாவில் பாரம்பரிய இசை, நடனம் மற்றும் ராணுவ XI அணிக்கும் லடாக் யூனியன் பிரதேச அணிக்கும் இடையேயான ஐஸ் ஹாக்கி கண்காட்சி போட்டி ஆகியவை பார்வையாளர்களை கவர்ந்தன. லடாக் துணை நிலை ஆளுநர் கவிந்தர் குப்தா போட்டிகளை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, லடாக் யூனியன் பிரதேசத்தைப் பாராட்டி, “கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டிகள் இந்தியாவின் குளிர்கால விளையாட்டு எதிர்காலத்திற்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது. இமயமலையில் தொடங்கி நாடு முழுவதும் குளிர்கால விளையாட்டுகள் வளர்ந்து வருவதை இது நிரூபிக்கிறது” என்று தெரிவித்தார். இந்த போட்டிகள் இரு கட்டங்களாக நடத்தப்படுகின்றன. முதல் கட்டம் லே நகரில் நடைபெற, இரண்டாம் கட்டம் பிப்ரவரியில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் குல்மார்க்கில் நடைபெற உள்ளது. இது விளையாட்டு வீரர்களுக்கு மாறுபட்ட நிலப்பரப்புகள் மற்றும் சூழ்நிலைகளில் போட்டி அனுபவம் பெற உதவுவதுடன், சர்வதேச குளிர்கால விளையாட்டு தரங்களுக்கு தங்களை தயார்படுத்தும் வாய்ப்பையும் வழங்குகிறது. லடாக் சமீபத்தில் தனது முதல் விளையாட்டு கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளதையும் கவிந்தர் குப்தா குறிப்பிட்டார். பள்ளி மட்டத்தில் திறமையான வீரர்களை அடையாளம் காணுதல், பெண்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான உள்ளடக்கிய சூழல், விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைகளில் 4 சதவீத இடஒதுக்கீடு, உதவித்தொகைகள் மற்றும் ரூ.100 கோடி வரை ரொக்கப் பரிசுகள் வழங்குவது ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டிகள் 2026-ல் சுமார் 480 விளையாட்டு வீரர்கள் உட்பட 1060 பேர் பங்கேற்கின்றனர். NDS மைதானம், குபூக்ஸ் குளம் மற்றும் லடாக் ஸ்கவுட்ஸ் ரெஜிமென்டல் சென்டர் ரிங்க் ஆகிய மூன்று இடங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. மேலும், ஒலிம்பிக் விளையாட்டான ஃபிகர் ஸ்கேட்டிங் இந்த ஆண்டில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிகள் இந்தியாவின் குளிர்கால ஒலிம்பிக் கனவுகளுக்கு புதிய ஊக்கமாக அமையும் என விளையாட்டு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.